சனி, 23 ஜூன், 2018

வரவேற்கிறோம்....

   கபிலன் பதிப்பகத்தின் வலைத்தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 2005ஆம் ஆண்டிலிருந்து புதுவையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கபிலன் பதிப்பகம் தமிழகத்தின் புகழ் மிக்க எழுத்தாளர்கள் பலரது நூல்களை வெளியிட்டுள்ளது.

   ஞானபீடம் அமரர் ஜெயகாந்தன், சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி,  தொல்காப்பிய அறிஞர் ஆ. சிவலிங்கனார், கவிஞர் இரா. மீனாட்சி போன்றோரின் நூல்களை வெளியிட்டுள்ளது.

  தமிழ் மொழி, இலக்கிய, பண்பாட்டுப் பொருண்மைகளில் வெளியாகும் கபிலன் பதிப்பகத்தின் படைப்புகள் பரவலாகத் தமிழ் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

  தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கும் தமிழ் வளர்ச்சியின் சிறந்த நூல்களுக்கான விருதினை மூன்று முறை பெற்ற சிறப்புக்குரியது. தமிழகத்தின் பல அறக்கட்டளை விருதுகளையும் கபிலன் பதிப்பக வெளியீடுகள் பெற்றுள்ளன. 

  கவிதை, கட்டுரை, சிறுகதை, திறனாய்வு, வரலாறு, மொழியியல் என விரியும் பலதுறை நூல்கள் கபிலன் பதிப்பகத்தின் வழி வெளிவருகின்றன. அவற்றில் சில பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாட நூலாகவும் இடம் பெற்றுள்ளன. 

  நூல்கள் குறித்த விவரங்களையும், அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ள உட்பக்கங்களுக்கு உங்களை வரவேற்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கபிலனின் வெளியீடுகள்

  நூல் ஆசிரியர் ஆண்டு விலை மானுடம் பேணிய தமிழ்  ஜோசப் சகாயராஜ்  2005 சீதாயணம்  சேதுபதி பாரிவேட்டை  சேதுபதி தமிழ்...